< Back
மாநில செய்திகள்
ஞானிபுல்லான் சாது ஜீவசமாதியில் கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஞானிபுல்லான் சாது ஜீவசமாதியில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
23 May 2022 7:06 PM GMT

ஞானிபுல்லான் சாது ஜீவசமாதியில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே பனையப்பட்டியில் ஆயிரம் பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள ஞானி புல்லான் சாதுவின் 24-ம் ஆண்டு குருபூஜை, கும்பாபிஷேகம், அன்னதான பெருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆயிரம் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஞானி புல்லான் சாதுவின் ஜீவசமாதியில் யாகசாலை பூஜைகளை செழியன் சுவாமிகள் மற்றும் சேகர் சாமி உள்ளிட்ட சித்தர் பீட விழாக்குழுவினர் செய்தனர். இதில் புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று ஞானி புல்லான் சாதுவிற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஞானி புல்லான் சாதுவின் ஜீவசமாதி கோபுரத்தில் உள்ள கும்ப கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்