< Back
மாநில செய்திகள்
குளித்தலை மகா பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

குளித்தலை மகா பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
19 May 2022 6:26 PM GMT

குளித்தலை மகா பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

குளித்தலை,

குளித்தலை பெரியார் நகரில் மகா பாலவிநாயகர் கோவில் உள்ளது இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் மகா பாலவிநாயகர் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்