< Back
மாநில செய்திகள்
குலசேகரனம்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்108 திருவிளக்கு பூஜை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

குலசேகரனம்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்108 திருவிளக்கு பூஜை

தினத்தந்தி
|
29 Sep 2023 6:45 PM GMT

குலசேகரனம்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடந்தது. இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான தீபாரதனை நடைபெற்றது. இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்