< Back
மாநில செய்திகள்
நாட்டிய ரத்னா விருதுபெற்ற மாணவிக்கு பாராட்டு
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

நாட்டிய ரத்னா விருதுபெற்ற மாணவிக்கு பாராட்டு

தினத்தந்தி
|
5 Oct 2023 6:28 PM GMT

ஆற்காட்டில் நாட்டிய ரத்னா விருதுபெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆற்காடு சரஸ்வதி பரத நாட்டிய பள்ளி சார்பில், ஆற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் மகாத்மாவின் நாளில், மகத்தான சாதனை என்னும் பரத நாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு 13 மணி நேரம் நடனம் ஆடி கின்னஸ் சாதனை செய்தனர். இதில் ஆற்காடு மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ்-1 மாணவி ஹேமமாலினி கலந்து கொண்டு நாட்டிய ரத்னா விருது பெற்றார். விருது பெற்ற மாணவியை லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் பாலாஜி லோகநாதன் மற்றும் பள்ளி முதல்வர் சுவேதா ஆகியோர் பாராட்டி வாழ்த்தி பரிசு, புத்தகம் வழங்கினர்.

மேலும் செய்திகள்