< Back
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்

தினத்தந்தி
|
18 March 2023 4:59 PM GMT

வடமதுரையில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்தியதாக அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

எரியோடு வடக்கு தெருவைச் சேர்ந்த நாகராஜ் (வயது 27). இவர், பழனியில் உள்ள பொரி கடலை தயாரிக்கும் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரும், பழனியில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்த 20 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 2 பேரும் கடந்த 15-ந்தேதி வடமதுரை முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு எரியோடு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் 2 பேரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து நாகராஜ், தனது மனைவியுடன் வடமதுரையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை நாகராஜ் வெளியே சென்றுவிட்டார். இதனால் அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அவரது உறவினர்கள் அங்கு வந்து, இளம்பெண்ணை கடத்தி சென்றனர். இதுகுறித்து நாகராஜ் எரியோடு போலீசில் புகார் அளித்தார். ஆனால் சம்பவம் நடந்தது வடமதுரை என்பதால், எரியேர் போலீசார் இந்த மனுவை வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்