< Back
மாநில செய்திகள்
கருணாநிதி பிறந்த நாள் விழா
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கருணாநிதி பிறந்த நாள் விழா

தினத்தந்தி
|
4 Jun 2023 7:00 PM GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கருணாநிதி பிறந்த நாள் விழா

நத்தத்தில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்கு தி.மு.க. நகர துணைசெயலாளரும், பேரூராட்சியின் கவுன்சிலருமான சகுபர்சாதிக் தலைமை தாங்கினார். விழாவில் காந்திஜி கலையரங்கம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் ஒடிசா ெரயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொப்பம்பட்டி ஒன்றியம்

இதேபோல் பழனி அருகே தொப்பம்பட்டி ஒன்றியம், புளியம்பட்டி நால்ரோட்டில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டு, கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

அதன்பிறகு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் கதிர்வேல், கண்ணுச்சாமி, சோமு, அண்ணாத்துரை, செல்லமுத்து, சாமிக்கண்ணு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

டி.புதுப்பட்டி

கன்னிவாடி அருகே உள்ள டி.புதுப்பட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி தலைமை தாங்கினார். அப்போது அவர் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

இந்த விழாவில் புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், துணைத்தலைவர் தங்கமணி முருகையா, புதுப்பட்டி கிளை செயலாளர் உதயகுமார் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், இளைஞரணி, சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ரெட்டியார்சத்திரம்

ரெட்டியார்சத்திரத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு கொத்தப்புளி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கி, கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் 17 கிளை பகுதிகளிலும் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்