< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்: குன்றத்தூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
மாநில செய்திகள்

காஞ்சிபுரம்: குன்றத்தூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

தினத்தந்தி
|
13 Nov 2022 5:00 PM GMT

குன்றத்தூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குன்றத்தூர் தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு உட்பட குன்றத்தூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெறுவதால் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்