< Back
மாநில செய்திகள்
சிறுபாலத்தில் கார் மோதி காஞ்சீபுரம் ஆசிரியை பலி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

சிறுபாலத்தில் கார் மோதி காஞ்சீபுரம் ஆசிரியை பலி

தினத்தந்தி
|
1 Aug 2023 1:32 PM GMT

சேத்துப்பட்டு அருகே சிறுபாலத்தில் கார் மோதி காஞ்சீபுரம் ஆசிரியை பரிதாபமாக இறந்தார். கணவன், மகள் படுகாயம் அடைந்தனர்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே சிறுபாலத்தில் கார் மோதி காஞ்சீபுரம் ஆசிரியை பரிதாபமாக இறந்தார். கணவன், மகள் படுகாயம் அடைந்தனர்.

கோவிலுக்கு சென்றனர்

காஞ்சீபுரம் இ.பி.நகர் ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 56), இவரது மனைவி மாலதி (53). இருவரும் ஆசிரியர்கள். இவா்களின் மகள் நிவேதா (24).

நேற்று சிவப்பிரகாசம், மனைவி, மகளுடன் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு காரில் சென்றனர்.

அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை கோவிலில் இருந்து காஞ்சீபுரத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

சிறுபாலத்தில் மோதியது

காரை சிவப்பிரகாசம் ஓட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே சேத்துப்பட்டு- வந்தவாசி சாலையில் கோழிப்புலியூர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி அருகே இருந்த சிறுபாலத்தில் கார் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் சிவப்பிரகாசம், மாலதி, நிவேதா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆசிரியை பலி

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மாலதி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து படுகாயம் அடைந்த சிவபிரகாசம், நிவேதா ஆகியோர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் தகவல் அறிந்த தேசூர் போலீசார் விரைந்து வந்து மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்