< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில்  தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தினத்தந்தி
|
20 Aug 2023 12:34 PM GMT

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் ஏற்பாட்டில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சீபுரத்தில் நடந்தது. உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர் தலைமை தாங்கினார்.

காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில் ஆட்டோ டிரைவர்கள் 538 பேருக்கு சீருடை மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படித்த அதிக மதிப்பெண் பெற்ற 42 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார்.

உத்திரமேரூர்அடுத்த சிறுங்கோழி கிராமத்தில் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ. எழிலரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்