< Back
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டு காளை முட்டி விவசாயி பலி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு காளை முட்டி விவசாயி பலி

தினத்தந்தி
|
18 Aug 2023 6:50 PM GMT

ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

ஜல்லிக்கட்டு காளை முட்டியது

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள மங்களத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்னமணி. இவருடைய மகன் ரகுபதி (வயது 31), விவசாயி. இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரகுபதி கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார்.

இந்தநிலையில் வெளியூர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ரகுபதி காளை களம் இறங்கி பரிசுகளை வாங்கிக் குவித்தது. நேற்று முன்தினம் காளைக்கு தண்ணீர் வைக்க ரகுபதி சென்றபோது அவரது கால் தொடையில் காளை முட்டியது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் பலத்த காயமடைந்த ரகுபதியை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரகுபதி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்