< Back
மாநில செய்திகள்
பெரிய கட்சி என்பதால் அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
மாநில செய்திகள்

"பெரிய கட்சி என்பதால் அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும்" - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

தினத்தந்தி
|
23 Jan 2023 4:51 AM GMT

திமுக, மக்களின் நம்பிக்கையை இழந்திருப்பதாக தமாகா தலைவர் ஜிகே.வாசன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கடந்த பல மாதங்களாக திமுக ஆட்சி, மக்களின் மீது பல சுமைகளை ஏற்றி இருக்கிறார்கள். அதற்கு தொலைக்காட்சியும், பத்திரிகையுமே சாட்சி. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற அவநம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இடைத்தேர்தலை பொறுத்தவரையில் திமுக மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது. பெரிய கட்சி என்பதால், அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும். எனவே இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் வெற்றிபெறுவதற்கான வியூகத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இந்த வியூகம் வெற்றி வியூகமாக அமையும். இன்றைய அரசியல் சூழல், தமிழ் மாநில காங்கிரசின் எதிர்கால வெற்றிக்கு அடித்தளமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்