< Back
மாநில செய்திகள்
தி.மு.க.வையும், காங்கிரசையும் பிரிக்க முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது-  கே.சி.வேணுகோபால் பேட்டி
மாநில செய்திகள்

தி.மு.க.வையும், காங்கிரசையும் பிரிக்க முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது- கே.சி.வேணுகோபால் பேட்டி

தினத்தந்தி
|
9 March 2024 5:21 PM GMT

மக்களுக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான மத்திய அரசு கவிழும் என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசினார்.

சென்னை,

தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தான பின்னர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீண்டும் தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது எங்களுக்கு மிகவும் மகழ்ச்சியான தருணமாக உள்ளது. தமிழகத்தின் பெருமை எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு நாளும் பிரதமர் மோடியும், மத்திய அரசும் தமிழகத்தின் பெருமைக்கு எதிராக செயல்படுகின்றனர்.

எங்கள் அகில இந்திய தலைமை கூறியது போன்று, காங்கிரஸ் கட்சியானது தமிழகத்தில் 9 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் என 10 இடங்களில் போட்டியிடும். மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடும்.

நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். நாட்டில் தமிழ்நாடு ஒரு புதுமையான திட்டத்தை அமைப்பதுடன் புதிய மாதிரியான மாநிலமாக அமையும். மக்களுக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான மத்திய அரசு கவிழும்."என்றார்

மேலும் செய்திகள்