< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு
|5 Dec 2022 6:45 PM GMT
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கண்டமங்கலம் ஒன்றியம் பஞ்சமாதேவி ஊராட்சியை சேர்ந்த சமூகஆர்வலர் பிரசாந்த் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊராட்சிக்குட்பட்ட ப.வில்லியனூரில் அரசால் வழங்கப்படும் பிரதமரின் ஆவாஸ்யோஜனா இலவச வீடு வழங்கும் திட்டத்தில் ஒரே குடும்பத்தில் முறைகேடாக கணவருக்கு ஒரு வீடும், மனைவிக்கு ஒரு வீடும், மாமனார், மகனுக்கு என்று தனித்தனியாக 2 வீடுகளும் என மொத்தம் 4 வீடுகள், கட்டாமலேயே அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.