< Back
மாநில செய்திகள்
வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அறிமுகம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அறிமுகம்

தினத்தந்தி
|
13 Oct 2023 6:08 PM GMT

நெமிலி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது.

நெமிலி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது பணமில்லா பரிவர்த்தனை என்பது நாடு முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற நிறுவனங்கள் மூலமாக பணமில்லா பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேளாண்மைத் துறையிலும் பணமில்லாத பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

அதேபோல் நெமிலி வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இந்த பணமில்லா பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. க்யூ ஆர் ஸ்கேன் கோடு, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி இனி விவசாயிகள் வேளாண்மை இடுப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த பணமில்லா பரிவர்த்தனையை நெமிலி வட்டார விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்