< Back
மாநில செய்திகள்
லாரி கவிழ்ந்து டிரைவா்கள் படுகாயம்
தர்மபுரி
மாநில செய்திகள்

லாரி கவிழ்ந்து டிரைவா்கள் படுகாயம்

தினத்தந்தி
|
25 May 2022 2:34 PM GMT

தொப்பூர் கணவாயில் டைல்ஸ் கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவா்கள் படுகாயம் அடைந்தனர்.

நல்லம்பள்ளி:

லாரி கவிழ்ந்தது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திண்டுக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டது. இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் (வயது29) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக முனிராஜ் (28) என்பவர் உடன் வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர்கள் 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். மேலும் டைல்ஸ் கற்கள் சாலையில் சிதறின.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து டிரைவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்