< Back
மாநில செய்திகள்
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்

தினத்தந்தி
|
24 May 2022 7:56 PM GMT

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது.

பாடாலூர்:

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட தொடக்க விழா பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் இரூர், நாரணமங்கலம், காரை, நக்கசேலம், கீழமாத்தூர், அல்லிநகரம் ஊராட்சிகளில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்ததை, ஆலத்தூர் வட்டாரத்தில் விவசாயிகள் நேரலையில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இரூர் ஊராட்சியில் ஆலத்தூர் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் சார்பாக தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், ஒரு விசைத் தெளிப்பான், உளுந்து விதை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்