< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் ஆய்வு
|10 Oct 2022 10:03 AM GMT
மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. காஞ்சீபுரம் பஸ்நிலையம் பின்புறம் உள்ள சி.எஸ்.ஐ. மிஷன் ஆஸ்பத்திரிக்கு உள்ளே நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின் போது மாநகராட்சி பணிக்குழு தலைவர் சுரேஷ், மாநகராட்சி என்ஜினீயர் கணேசன், உதவி என்ஜினீயர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.