< Back
மாநில செய்திகள்
நடிகை குஷ்பு குறித்து அநாகரிக பேச்சு: தி.மு.க. முன்னாள் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன்
மாநில செய்திகள்

நடிகை குஷ்பு குறித்து அநாகரிக பேச்சு: தி.மு.க. முன்னாள் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன்

தினத்தந்தி
|
21 July 2023 4:48 PM GMT

சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவி, நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து அநாகரிகமாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை கொடுங்கையூர் போலீசாரால் கடந்த மாதம் 18-ந்தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'பொதுக்கூட்டங்களில் அரசியல் பிரச்சினைகள் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். அதுபோன்ற நேரங்களில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சில நகைச்சுவைகளை கூறுவேன். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனது பேச்சு இருதரப்பினரிடையே பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலோ, யாரையும் இழிவுபடுத்தும் வகையிலோ இல்லை. சிலரை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக நான் பேசிய 2 நாட்களுக்கு பின்பு சப்-இன்ஸ்பெக்டரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், 'கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்று அநாகரிகமாக பேசக்கூடாது. சாட்சிகளை கலைக்கக்கூடாது' என நிபந்தனை விதித்தார். இவர் தி.மு.க.வில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்