< Back
மாநில செய்திகள்
நீர்வரத்து அதிகரிப்பு; மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
மாநில செய்திகள்

நீர்வரத்து அதிகரிப்பு; மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

தினத்தந்தி
|
19 May 2022 2:33 PM GMT

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் மணிமுத்தாறு அணைக்கு இன்றைய நிலவரப்படி 226 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் அருவியை தொலைவில் இருந்து பார்வையிட மட்டும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

மேலும் செய்திகள்