< Back
மாநில செய்திகள்
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி
மாநில செய்திகள்

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தினத்தந்தி
|
18 March 2023 6:45 PM GMT

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்து உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழைப்பொழிவு இல்லை. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கோடைமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 51 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 153 கனஅடியாக அதிகரித்து உள்ளது. 152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 117.40 அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 256 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு மற்றும் தேனி மாவட்ட பகுதியில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- பெரியாறு 13.6, தேக்கடி 4.3, கூடலூர் 0.8, சண்முகா நதி 1.8, உத்தமபாளையம் 1.4, வைகை அணை 1.4, சோத்துப்பாறை அணை 34, பெரியகுளம் 7.

Related Tags :
மேலும் செய்திகள்