< Back
மாநில செய்திகள்
தேங்காய் சிரட்டை விலை உயர்வு
கரூர்
மாநில செய்திகள்

தேங்காய் சிரட்டை விலை உயர்வு

தினத்தந்தி
|
4 July 2022 5:32 PM GMT

தேங்காய் சிரட்டை விலை உயர்ந்துள்ளது.

நொய்யல், மரவாபாளையம், முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் பறித்து தேங்காய் பருப்புகளை எடுத்து காயவைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டை கைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய தேங்காய் சிரட்டைகளை கரி தயார் செய்பவர்களுக்கும், பவுடர் தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.8-க்கு விற்பனையானது. இந்த வாரம் ரூ.10-க்கு விற்பனையாகிறது.

மேலும் செய்திகள்