< Back
மாநில செய்திகள்
தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு

தினத்தந்தி
|
13 Oct 2022 7:30 PM GMT

தர்மபுரியில் ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்துள்ளது.

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 468 கிலோவாக இருந்த பட்டுக் கூடுகள் வரத்து, நேற்று 1,038 கிலோவாக அதிகரித்தது. நேற்று அதிகபட்சமாக ரூ.722- க்கும், குறைந்தபட்சமாக ரூ.490-க்கும், சராசரியாக ரூ.630-க்கும் பட்டுக் கூடுகள் விற்பனையானது. மொத்தம் ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 358 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்