< Back
மாநில செய்திகள்
கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை..!
மாநில செய்திகள்

கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை..!

தினத்தந்தி
|
23 Jun 2023 4:44 AM GMT

கரூரில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை நடந்தது. சென்னை, கரூர், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. கரூரில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை 8 நாட்கள் சோதனை நீடித்தது.

இந்த நிலையில், கரூரில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் - ஈரோடு சாலை கோதை நகர் பகுதியில் உள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 5 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்