< Back
மாநில செய்திகள்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்குவித்தல் பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்குவித்தல் பயிற்சி

தினத்தந்தி
|
16 Dec 2022 7:19 PM GMT

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்குவித்தல் பயிற்சி நடந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 50 அங்கன்வாடி பணியாளர்களுக்கு அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மூலமாக பணி ஊக்குவித்தல் பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்கள் அளிக்கப்பட்டது. இதில் உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரமான உணவுகள் குறித்தும், மனித உறவுகள் மேம்பாடு குறித்தும், மனநலம் மற்றும் மன அழுத்தம் போக்குதல் குறித்தும், குழு உணர்வு மேம்பாடு குறித்தும், தகவல் தொடர்பு கலை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை திருச்சி மண்டல மைய துணை கலெக்டரும், இளநிலை நிர்வாக அலுவலருமான சக்திவேல் ஆய்வு செய்தார். இப்பயிற்சி நிறைவு நாளான நேற்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி கலந்து கொண்டு பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியை சேர்ந்த உதவி கணக்கு அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்