< Back
மாநில செய்திகள்
காந்தி மார்க்கெட் திறப்பு விழா
திருநெல்வேலி
மாநில செய்திகள்

காந்தி மார்க்கெட் திறப்பு விழா

தினத்தந்தி
|
8 March 2023 7:02 PM GMT

பாளையங்கோட்டையில் காந்தி மார்க்கெட் திறப்பு விழா நடந்தது.

பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கிருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக ஜவகர் மைதானத்திலும், பழைய போலீஸ் குடியிருப்பிலும் காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றம் செய்யப்பட்ட மகாத்மா காந்தி தினசரி மார்க்கெட் திறப்பு விழா மற்றும் மார்க்கெட்டுக்கு இடம் வழங்குவதற்கு உதவி செய்பவர்களுக்கு பாராட்டு விழா, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஆகிய முப்பெரும் விழா பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது.

இந்த விழாவிற்கு காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் சாலமோன் தலைமை தாங்கினார். பொருளாளர் இசக்கி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் பெரியபெருமாள் வரவேற்று பேசினார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மார்க்கெட்டை திறந்து வைத்து பேசினார். மேயர் பி.எம்.சரவணன், பழைய போலீஸ் குடியிருப்பில் உள்ள மின் இணைப்பு அறையையும், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஜவகர் மைதானத்தில் உள்ள மின் இணைப்பு அறையையும், தண்ணீர் பந்தலை மண்டலத்தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

விழாவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில் தெற்கு பஜார் வியாபாரிகள் சங்கத்தலைவர் உமாபதி சிவன், கவுன்சிலர்கள் நித்தியபாலையா, ஜெகநாதன், பவுல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்