< Back
மாநில செய்திகள்
அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா
கரூர்
மாநில செய்திகள்

அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா

தினத்தந்தி
|
25 Aug 2022 6:16 PM GMT

அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.

தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு இளம் அறிவியல் மற்றும் கலைப்பிரிவு பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு முடிவடைந்தது. இதையடுத்து நேற்று முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் காலையில் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கும், மதியம் கலைப்பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. விழாவில், கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, அனைத்துத்துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்