< Back
மாநில செய்திகள்
வேதாரண்யத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க  கடலுக்கு செல்லவில்லை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வேதாரண்யத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

தினத்தந்தி
|
19 Sep 2022 6:45 PM GMT

புரட்டாசி மாதத்தால் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்ததால் வேதாரண்யத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், கோடியக்கரை ஆகிய மீனவ கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் உள்னன. இந்த கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலான மக்கள் புரட்டாசி மாத விரதம் மேற்கொள்வதால் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதனால் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் கூலிக்கு கூட மீன்கள் விலை போகவில்லை. இதன்காரணமாக மீனவர்கள் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். மீன் விலை வீழ்ச்சியால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.இதை தொடர்ந்து மீனவர்கள் தங்களது விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் வேதாரண்யம் கடற்கரை பகுதி வெறிச்சோடி கிடந்தது.

மேலும் செய்திகள்