< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில், நாளைமறுநாள்குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தினத்தந்தி
|
13 Jun 2022 2:10 PM GMT

தூத்துக்குடியில், நாளைமறுநாள்குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்