< Back
மாநில செய்திகள்
தேனி மாவட்டத்தில்  ஊராட்சி செயலர்கள் தொடர் விடுப்பு போராட்டத்தால் பணிகள் பாதிப்பு
தேனி
மாநில செய்திகள்

தேனி மாவட்டத்தில் ஊராட்சி செயலர்கள் தொடர் விடுப்பு போராட்டத்தால் பணிகள் பாதிப்பு

தினத்தந்தி
|
13 Sep 2022 4:53 PM GMT

தேனி மாவட்டத்தில் ஊராட்சி செயலர்கள் தொடர் போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது

தேனி மாவட்டத்தில் மொத்தம் 13 கிராம ஊராட்சிகள் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்கள், சார்நிலை கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12-ந்தேதி முதல் விடுப்பு எடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊராட்சிகளில் தினந்தோறும் நடைபெற்று வரும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குடிநீர் வினியோகம், சுகாதார பணிகள் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்