< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில்வெள்ளை ரக பட்டு கூடுகள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி
மாநில செய்திகள்

மாவட்டத்தில்வெள்ளை ரக பட்டு கூடுகள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
25 Dec 2022 6:45 PM GMT

தேனி மாவட்டத்தில் வெள்ளை ரக பட்டு கூடுகள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேனி மாவட்டத்தில் உப்புக்கோட்டை, கோட்டூர், சின்னமனூர், கூடலூர், போடி மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மல்பெரி செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டுக் கூடு உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. பட்டுகூட்டில் கோலார் கோல்டு (மஞ்சள்), ஒயிட் (வெள்ளை) என இரு ரக பட்டு கூடு அனைத்து பருவங்களிலும் உற்பத்தியாகும். அதே வேளையில் வெள்ளை ரக பட்டு உற்பத்தி குறிப்பிட்ட பருவ நிலைக்கு ஏற்ப உற்பத்தியாகும்.

இந்த ரக பட்டு கூடுகளுக்கு சந்தைகளில் அனைத்து நாட்களிலும் கடும் கிராக்கி உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் ஒயிட் ரக பட்டுக்கூடு தான் 80% சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை கோவை, ஒசூர், கர்நாடக மாநிலம் ராம்நகர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து பட்டு கூடு உற்பத்தி விவசாயி கூறுகையில், நான் ஒரு ஏக்கரில் மல்பெரி செடிகள் சாகுபடி செய்துள்ளேன். இதன் மூலம் 80 அட்டைகள் வரை வளர்க்கலாம், முட்டை வைத்த 30 நாட்களில் புழுக்கள் நன்றாக வளர்ந்து விடும். வழக்கமான நாட்களில் 80 முட்டைகள் வளர்த்தால் 60 முதல் 70 கிலோ வரை கூடுகள் உற்பத்தியாகும். தற்போது கடும் பனி பொழிவு உள்ளதாலும் ஊசி ஈ மற்றும் சுண்ணாம்புக்கல் நோய் தாக்குவதாலும் உற்பத்தி குறைந்து வருகிறது. கடந்த மாதம் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை ரக பட்டு கூடு தற்போது ரூ.600 முதல் 700 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்