< Back
மாநில செய்திகள்
பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

தினத்தந்தி
|
24 Jun 2023 6:15 PM GMT

பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து பெரம்பலூர் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பயிற்சியினை பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துசாமி, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சீரங்கன் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பயிற்சியினை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன் ஆகியோர் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கினர். மாணவ-மாணவிகளின் ஆரோக்கியம், உடல்நலம் பதின்ம பருவத்திற்கான மனவெழுச்சி நலன், ஆசிரியர்-மாணவர் மனவெழுச்சி நலன் மேம்பாடு மற்றும் வாழ்வியல் திறன் மேம்பாடு ஆகிய தலைப்புகளின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியினை கருத்தாளர்களான முதுகலை ஆசிரியர்கள் அளித்தனர். 113 முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

மேலும் செய்திகள்