< Back
மாநில செய்திகள்
பரமக்குடியில், அ.தி.மு.க.வில் இணைந்த இளைஞர்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பரமக்குடியில், அ.தி.மு.க.வில் இணைந்த இளைஞர்கள்

தினத்தந்தி
|
9 Jan 2023 6:43 PM GMT

பரமக்குடியில், அ.தி.மு.க.வில் இளைஞர்கள் இணைந்தனர்.

பரமக்குடி,

பரமக்குடி கீர்த்தி மகாலில் அ.தி.மு.க.வில் இளைஞர்கள் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி வேட்டிகள், சால்வைகள் அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் நேதாஜி, ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர் துளசிராமன், நகர் மன்ற உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்