< Back
மாநில செய்திகள்
தேவதானப்பட்டியில்செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
தேனி
மாநில செய்திகள்

தேவதானப்பட்டியில்செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
21 Aug 2023 6:45 PM GMT

தேவதானப்பட்டியில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தேவதானப்பட்டியில் வேளாளர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட பிள்ளை செல்வ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 18-ந்தேதி கணபதி பூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றது. 19-ந்தேதி 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜை நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து புனித நீர் எடுத்து கொண்டு வரப்பட்டது. பின்னர் அவை கோவிலின் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தா்கள் ஓம் சக்தி, பரா சக்தி என்ற கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தி்ற்கான ஏற்பாடுகளை கவுரவ தலைவர் மனோகரன், தலைவர் அருணாசேகர் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்