< Back
மாநில செய்திகள்
குழந்தை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மாநில செய்திகள்

குழந்தை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

தினத்தந்தி
|
14 Jun 2022 4:13 AM GMT

குழந்தை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 38). பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீசினியாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் ஹரிஹரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஹரிஹரன் வீட்டில் மின்விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த மப்பேடு போலீசார் ஹரிஹரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்