< Back
மாநில செய்திகள்
கடலூரில், சி.ஐ.டி.யு.வினர் பிரசார நடைபயணம்
கடலூர்
மாநில செய்திகள்

கடலூரில், சி.ஐ.டி.யு.வினர் பிரசார நடைபயணம்

தினத்தந்தி
|
21 May 2023 6:45 PM GMT

குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வலியுறுத்தி கடலூரில், சி.ஐ.டி.யு.வினர் பிரசார நடைபயணம் மேற்கொண்டனர்.

அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்கிட வேண்டும். தொழிற்சாலை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெறவேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 7 இடங்களில் இருந்து திருச்சியை நோக்கி சி.ஐ.டி.யு.வினர் நடை பயண பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூரில் தொடங்கிய நடைபயண பிரசாரத்திற்கு மாநில உதவி பொதுச்செயலாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயபால், கடலூர் மாவட்ட செயலாளர் பழனிவேல், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர்கள் திருவாரூர் முருகையன், நாகை தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து கடலூர் போக்குவரத்து கழக பணிமனை அருகில் இருந்து தொடங்கிய பிரசார நடைபயணமானது பாரதி சாலை, செம்மண்டலம், சாவடி மற்றும் கோண்டூர் வழியாக நெல்லிக்குப்பம் வரை சென்றது.

இதில் மாவட்ட செயலாளர்கள் மாரியப்பன், துரைசாமி, மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் சுப்பராயன், ராஜேஷ் கண்ணன், திருமுருகன் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பிரசார பயணமானது வருகிற 30-ந் தேதி திருச்சியில் நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்