< Back
மாநில செய்திகள்
108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்
ஈரோடு
மாநில செய்திகள்

108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்

தினத்தந்தி
|
11 Dec 2022 9:11 PM GMT

108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பெற்றாா்.

தாளவாடி

தாளவாடியை அடுத்த அருள்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி காவியா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருைடய உறவினர்கள் தாளவாடியில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ், அங்கிருந்து காவியாவை ஏற்றிக்கொண்டு தாளவாடி அரசு மருத்துவமனையை நோக்கி சென்றது. ஆம்புலன்சை அந்ேதாணிராஜ் ஓட்டினார்.

அவசர கால மருத்துவராக ரங்கசாமி இருந்தார். அருள்வாடியை கடந்து ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோது காவியாவுக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. இதையடுத்து ஆம்புலன்சை டிரைவர் சாலையோரம் நிறுத்தினார். உடனே காவியாவுக்கு ஆம்புலன்சில் இருந்த அவசர கால மருத்துவர் ரங்கசாமி பிரசவம் பார்த்தார். இதில் காவியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து தாயும், சேயும் தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்