< Back
மாநில செய்திகள்
குடும்ப தகராறில் தற்கொலைக்கு முயன்ற கணவன் சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

குடும்ப தகராறில் தற்கொலைக்கு முயன்ற கணவன் சாவு

தினத்தந்தி
|
25 Sep 2023 7:30 PM GMT

ஊத்தங்கரையில் குடும்ப தகராறில் தற்கொலைக்கு முயன்ற கணவன் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊத்தங்கரை:-

ஊத்தங்கரையில் குடும்ப தகராறில் தற்கொலைக்கு முயன்ற கணவன் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு

ஊத்தங்கரை காமராஜ்நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 27). இவருடைய மனைவி பவித்ரா (19). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப சண்டை வந்துள்ளது.

நேற்று தகராறு முற்றவே இருவரும் தூக்குப்போட்டு தற்கொலைக்கு செய்ய முயன்றனர். இதில் திருநாவுக்கரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பவித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

போலீசார் விசாரணை

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

திருநாவுக்கரசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Tags :
மேலும் செய்திகள்