< Back
மாநில செய்திகள்
கரூர் அருகே மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர்
கரூர்
மாநில செய்திகள்

கரூர் அருகே மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர்

தினத்தந்தி
|
25 Aug 2022 6:12 PM GMT

கரூர் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு கணவர் தப்பியோடி விட்டார்.

நடத்தையில் சந்தேகம்

கரூர் அருகே உள்ள திருமாநிலையூரை சேர்ந்தவர் சிவா என்கிற செல்வராஜ் (வயது 52) சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி சத்யா என்கிற சந்தியா (40). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் சிவா-சந்தியா தம்பதி தாந்தோணிமலை என்.ஜி.ஓ.நகர் பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வந்தனர்.இந்நிலையில் சிவா கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டின் 2-வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்து காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் சத்யா சித்தாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சிவாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

குத்திக்கொலை

இந்தநிலையில் நேற்று இரவு சத்யா வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவா காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து சத்யாவை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார்.பின்னர் சிவா சற்று தொலைவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தனது மூத்த மகனிடம் நடந்த விவரத்தை கூறி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனால் பதறி அடித்து கொண்டு சத்யாவின் மூத்த மகன் வீட்டிற்கு வந்து, அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தாய் சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக இறந்தார்.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் மருத்துவமனைக்கு வந்து, சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, சிவாவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தாந்தோணிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்