< Back
மாநில செய்திகள்
விபத்தில் கணவன்-மனைவி படுகாயம்
விருதுநகர்
மாநில செய்திகள்

விபத்தில் கணவன்-மனைவி படுகாயம்

தினத்தந்தி
|
23 Jun 2023 12:34 AM IST

சிவகாசி அருகே விபத்தில் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர்.

சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்திரவள்ளி (வயது 48). இவர் சம்பவத்தன்று மதுரையில் நடை பெற்ற தனது நிறுவனத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு பஸ்சில் சிவகாசி திரும்பி உள்ளார். அவரை அவரது கணவர் பர்குணன் இரவு 11.30 மணிக்கு மோட்டார் சைக்களில் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இருவரும் மோட்டார் சைக்களில் வெம்பக்கோட்டை ரோடு வழியாக சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கணவன், மனைவி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்