< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
ஓட்டல் மேலாளர் திடீர் சாவு
|15 Aug 2023 8:50 PM GMT
ஓட்டல் மேலாளர் திடீரென உயிரிழந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 46). இவர் எல்லீஸ்நகர் பாலம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் எல்லீஸ்நகர் ரோட்டில் திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.