< Back
மாநில செய்திகள்
புனித அடைக்கல அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

புனித அடைக்கல அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி

தினத்தந்தி
|
2 May 2023 6:45 PM GMT

சங்கராபுரம் அருகே புனித அடைக்கல அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து தினமும் காலை நேரத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் அதிகாலை நடந்தது. முன்னதாக பங்குத்தந்தை சகாயசெல்வராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் இரவு 10 மணியளவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் காவல் சம்மனசு, சூசையப்பர், அந்தோணியார், புனித அடைக்கல அன்னை, குழந்தை ஏசு ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டு தேர்பவனி நடந்தது.

இந்த பவனியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் விரியூர், பழையனூர், சோழம்பட்டு, அருளம்பாடி, மைக்கேல்புரம், சவேரியார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, ஊர் காரியக்காரர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்