< Back
மாநில செய்திகள்
விடுமுறையையொட்டி  ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்  பரிசலில் சென்று மகிழ்ந்தனர்
தர்மபுரி
மாநில செய்திகள்

விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்

தினத்தந்தி
|
6 Nov 2022 7:00 PM GMT

விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்

பென்னாகரம்:

விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் விளங்கி வருகிறது. ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

இந்த நிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்தனர்.

போலீசார் தீவிர ரோந்து

பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, தொங்கும் பாலம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் அங்குள்ள கடைகள், உணவகங்களில் விற்பனை ஜோராக நடைபெற்றது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்