< Back
மாநில செய்திகள்
வெள்ளை கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்ககோழிகளுக்கு லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும்ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
நாமக்கல்
மாநில செய்திகள்

வெள்ளை கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்ககோழிகளுக்கு லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும்ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
10 Feb 2023 7:00 PM GMT

வெள்ளை கழிச்சல் நோயில் இருந்து கோழிகளை பாதுகாக்க ஊநீர் பரிசோதனை செய்து அதற்கேற்ப சீரான இடைவெளியில் லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இன்றும், 15-ந் தேதியும் மணிக்கு 4 கி.மீட்டர் வேகத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்திலும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்திலும், 14-ந் தேதி மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும். மேலும் இன்று வடக்கு திசையில் இருந்தும், நாளை மற்றும் 15-ந் தேதி வடகிழக்கு திசையில் இருந்தும், நாளை மறுநாள் மற்றும் 14-ந் தேதி கிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.

வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 62.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 70, 60, 60, 60, 60 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்கும்.

லசோட்டா தடுப்பூசி

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் வெள்ளை கழிச்சல் மற்றும் மேல் மூச்சுக்குழல் அயற்சி நோயால் இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே பண்ணையாளர்கள் தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். அதோடு வெள்ளை கழிச்சல் நோய்க்கான ஊநீர் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப சீரான இடைவெளியில் லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்