< Back
மாநில செய்திகள்
வெப்ப அயற்சியால் கோழிகள் சாவு:  கோடைக்கால பராமரிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்  ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
நாமக்கல்
மாநில செய்திகள்

வெப்ப அயற்சியால் கோழிகள் சாவு: கோடைக்கால பராமரிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
24 Jun 2022 6:58 PM GMT

வெப்ப அயற்சியால் கோழிகள் இறந்து வருவதால் பண்ணையாளர்கள் கோடைக்கால பராமரிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


வெப்ப அயற்சியால் கோழிகள் இறந்து வருவதால் பண்ணையாளர்கள் கோடைக்கால பராமரிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மழைக்கு வாய்ப்பு இல்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 4 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 65 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 55 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் மாடுகளில் பெரியம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகளை கடித்த கொசு, ஈக்கள் மற்றும் உண்ணி போன்றவை மற்ற மாடுகளை கடிக்கும் போது பரவுகிறது. எனவே பாதிக்கப்பட்ட மாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். மாடுகள் கட்டும் இடங்கள், பயன்படுத்தும் வாகனங்கள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

வெப்ப அயற்சி

கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்து உள்ளது தெரிய வருகிறது. எனவே பண்ணையாளர்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க நீர் தெளிப்பான் உபயோகிக்க வேண்டும். கோழித்தீவனத்தில் நுண்ணூட்ட சத்துக்கள், எலக்ட்ரோலைட்ஸ் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்