< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
வந்தவாசியில் கடும் பனிப்பொழிவு
|14 Dec 2022 4:59 PM GMT
வந்தவாசியில் கடும் பனிப்பொழி நிலவியது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சுற்றியுள்ள தெள்ளார், மழையூர், ஆராசூர், மருதாடு, சாலவேடு, சு.காட்டேரி உள்ளிட்ட கிராமங்களில் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மேலும் சாலைகளில் வாகனங்கள் வருவது தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றனர்.