< Back
மாநில செய்திகள்
கனமழை: நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மாநில செய்திகள்

கனமழை: நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தினத்தந்தி
|
8 Aug 2022 2:30 AM GMT

தொடர் மழையால் நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

நீலகிரி,

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. தொடர் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (8.8.2022) விடுமுறை அறிவித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்