< Back
மாநில செய்திகள்
கனமழை எச்சரிக்கை: 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புக்குழு அனுப்பி வைப்பு
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை: 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புக்குழு அனுப்பி வைப்பு

தினத்தந்தி
|
17 May 2024 1:12 PM GMT

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் வீதம் 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.

அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாநில பேரிடர் மீட்பு படை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லையில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், குமரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், நீலகிரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும் கோவையில் 30 வீரர்கள் கொண்ட ஒரு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்