< Back
மாநில செய்திகள்
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

தினத்தந்தி
|
4 Nov 2023 12:56 AM GMT

கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால், பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதற்கிடையில், இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று தமிழகத்தின் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் செய்திகள்