< Back
தமிழக செய்திகள்

கரூர்
தமிழக செய்திகள்
மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

8 Sept 2022 11:35 PM IST
மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
குளித்தலை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமதுரை (வயது 50). இவர் சம்பவத்தன்று குளித்தலை எம்.பி.எஸ் அக்ரகாரத்தில் கேபிள் டிவி வயர் சரி பார்க்கும் பணிக்காக அங்குள்ள மரத்தில் ஏறி உள்ளார். இந்தநிலையில் எதிர்பாராத விதமாக கால் தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.