< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்தவர் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

விஷம் குடித்தவர் சாவு

தினத்தந்தி
|
24 Jun 2023 9:14 PM GMT

நரிக்குடி அருகே விஷம் குடித்தவர் இறந்தார்.

காரியாபட்டி,

நரிக்குடி அருகே உள்ள ஆனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சமுத்திரக்கண்ணன் (வயது 48). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். தற்போது ஆனைகுளம் கிராமத்தில் இருந்து வந்த இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் விரைந்து வந்து சமுத்திரக்கண்ணனை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சமுத்திரக்கண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
மேலும் செய்திகள்